Recent Posts

மஹா மாரியம்மன் - ஆடி மாத சிறப்புகள் - தண்டுமாரி, மகா மாரியம்மன், சீதளாதேவி

மஹா மாரியம்மன் 

ஆடி மாத சிறப்புகள்

தண்டுமாரி, மகா மாரியம்மன், சீதளாதேவி


தண்டுமாரி 

கற்பு நெறி தவறாமல் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு பெண்ணை, அவள் ஒழுக்கங்கெட்டவள் என்று கூறி ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் அவளை தீயிலிட முயற்சிக்கையில், அவள் ஆடைகள் தீயில் கருகிவிட உடலில் தீக்காயங்களுடன் துணிகளை சலவை செய்யும் வண்ணார் வசிக்கும் பகுதிக்கு வந்து அவர்கள் வீட்டில் அடைக்கலமானாள். 

அவர்கள் அவளுக்குத் தூய வெள்ளாடை கொடுத்து அவளுக்கு உண்ண கூழ் கஞ்சி போன்றவற்றைக் கொடுத்து அவளது தீப்புண் களுக்கு மருந்திட்டு குணப்படுத்தினர். தீயில் அவள் உடல் கருகியதால் கருமாரி என்றும், தீய செயல்கள் செய்பவர்களை தண்டிப் பதால் தண்டுமாரி என்றும் பெயர்பெற்று தென் தமிழகத்தில் தண்டுமாரி என்ற பெயருடன் முக்கியமான வண்ணார் குலத்தவர் களால் குல தெய்வமாக வழிபடப்படுகிறாள். 

இது போல் பல கதைகள் நாட்டுப்புறங்களில் கதைப்பாட்டாகவும், வில்லுப்பாட்டாகவும் பன்னெடுங்காலமாக வழங்கப்பட்டு வருகின்றன. 

மகா மாரியம்மன் 

அன்னை என்றழைத்தவுடன் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து பேரறிவான பேரொளியாய் ஒரு நாமம், ஒரு உருவம் ஒன்று  

இன்றி நிற்கும் பராசக்தி சிருஶ்டி முதலிய கிருத்தியங்களில் ஆற்றலும் அவ்வாற்றலுடன் சேர்ந்து சரஸ்வதி, வைஶ்ணவி, ரௌத்ரீ,  

மாஹேஸ்வரி மனோன்மணி என்ற பெயர் பூண்டு ஞானசக்தி, கிரியா சக்தி, இச்சா சக்தி வடிவம் கொண்டு உயிர்களை உய்விக்க வேண்டும் எனும் பெருங்கருணையிலே தியான பூஜா நிமித்தமாய் அளவற்ற உருவமும் பெயரும் கொண்டு விறகில் தீ போலவும், பாலில் வெண்ணெய் போலவும், நின்று அருளும் இடமாகிய சமயபுரம் எனும் கண்ணனூரிலே, கிருஶ்ணாவதாரத்தில் தேவகியின் குழந்தையாக கிருஶ்ணனும், யசோதையின் குழந்தையாக மாயா தேவியும் அவதரித்தனர். 

பிறகு அவ்விரு குழந்தைகளும் இறைவன் விருப்பத்தினால் இடம் மாறின. தேவகியின் பிள்ளையால் தனக்கு அழிவு உண்டாகும் என்பதை அறிந்த கம்சன், பிள்ளைகள் இடம் மாறியதை அறியாமல் சிறையில் தேவகியிடமிருந்த பெண் குழந்தையின் கால்களைப் பற்றி கொல்லும் எண்ணத்துடன் கொல்ல மேலே தூக்கினான். அக்குழந்தை அவன் கைகளிலிருந்து மேலே எழும்பி - வில், அம்பு, சூலம், பாசம், சங்கு, சக்கரம், வாள் முதலிய ஆயுதங்களை தரித்து மாயாவாய் தோன்றினாள். அத்தேவியே மகா மாரியம்மன் என்ற கண்கண்ட தெய்வமாக அழைக் கப்பட்டாள். மக்களின் தீவினைகளையும், தீராத நோய்களையும், தன்னுடைய வேப்பிலை மகிமையால் தீர்த்து வைக்கும் ஆயிரங் கண்ணுடையவளாய் அருள்பாலிக்கிறாள். 

சீதளாதேவி 

வட இந்தியாவில் சீதல் மாதரீ  என்றும் சீதளாதேவி என்றும் அழைக்கப்படும் ஸ்ரீ மஹா மாரியம்மன் தன் கைகளில் சூலம், கபாலம், உடுக்கை, கத்தி, இவைகளைத் தாங்கிக்கொண்டு கரண்டம் என்னும் கிரீடமும் தன் இரு காதுகளிலும் தாடங்கம் என்ற ஆபரணத்தையும் தரித்துக்கொண்டு வேப்பமரத்தடியில் அமர்ந்திருப்பாள். சில ரூபங் களில் கையில் துடைப்பமும், கலசமும் ஏந்திக்கொண்டு, கழுதை வாகனத்தில் அமர்ந்திருப்பாள். இந்த சீதளாதேவியை சீதளாஶ்டகம் அல்லது சீதளா ஸ்தோத்திரம் சொல்லி வணங்கிவர அன்னையின் அருள் உண்டாகும். இந்த சீதளா ஸ்தோத்ரம் அக்னி புராணத்தில் அமைந் துள்ளது. 

சீதளா ஸ்தோத்திரத்தை ஜுரம் உள்ளவர்கள் படித்தால் உடலில் குளிர்ச்சி ஏற்பட்டு ஜுரம் நீங்கும். உடலில் கட்டி, கொப்புளம் போன்ற வெப்ப நோய் உடையவர்கள் ஜபித்துவர அன்னையின் அருளால் கொப்புளம் நீங்கி உடல் ஆரோக்கியமாகும். அம்மை நோயால் கண் பார்வை இழந்தவர்கள், முகம் கருத்தவர்கள், உடலின் பிற பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஸ்தோத்திரத்தால் தினமும்  அன்னையைத் துதித்து வர விரைவில் நோய் நீங்கி குணமடைவர். (இந்த ஸ்தோத்திரங்கள் இப்புத்தகத்தின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.) 

சீதளம் என்றால் குளுமை என்பது பொருள். தன்னைச் சரணடைந்த வெம்மை நோய் கண்டவர்களைக் குளிர்வித்து அந்நோய்களிலிருந்து அவர்களை விடுவித்து சுகமளிப்பவள் சீதளா தேவி. சீதளம்’ என்பது வடமொழிச் சொல். அதனையே தமிழில் ிமாரி’ என்றழைத்து, மாரியம்மனாகத் தென்னகத்தில் போற்றப் படுகிறாள். தன் பக்தர்களுக்குத் தாயாகவும், தந்தையாகவும், குருவாகவும் எல்லாமுமாக விளங்குபவள். தன்னைத் துதிப் பவர்களுக்கு ஆனந்தத்தைத் தருபவள். எந்த நோய் வந்தாலும் மாரியம்மனை வழிபட்டு அவளிடம் முறையிடுவதை நம் முன்னோர் முதல் கடமையாக செய்து வந்தனர். ஏனெனில் அவளே மருந்துகளின் தாய். உண்ணும் மருந்தும் அவளருளால் நோயுற்ற உடலை விரைவில் குணமடையச் செய்யும் என்று நம்பினார்கள். நம்பியவர்களைக் கைவிட்டதில்லை அந்த உலக நாயகி. அளவற்ற பெருங்கருணைத் தாயான மாரியம்மன் வேம்பு வடிவமாகத் திகழ்பவள். வேம்பின் அடியிலேயே கோயில்கொள் பவள். அதனால்தான் வைசூரியுற் றவர்களுக்கு வேப்பிலை மருந்தாகத் தரப்படுகிறது. மாரியம்மனை உபாஸிக்கும் பக்தர்களுக்கு வேப் பிலையே உணவாக விளங்கிவருகிறது. 

எல்லா மாயங்களையும் கடந்தவள் மாயி. எல்லா பெருமாயங் களையும் தன்னிடம் அடக்கி ஆள்பவள் மகாமாயி. அதனால் எந்தவொரு மந்திர  தந்திரமும் அவள் பக்தர்களை திக்காது. அவர்களை காத்து, கருப்பு அண்டாது. பில்லி, ஏவல், சூனியம் பயமுறுத்தாது. 

சீதளா தேவியைப் போற்றும் சீதளாஶ்டகம் தேவியின் பக்தர்களுக்கு அருட்பிரசாதம். எல்லா வேதங்களுக்கும் ஒப்பான இந்த ஸ்தோத்ரம் படிப்பவர்களை எந்த நோய்களும் அண்டாது. உடல் நலக்குறைவுற் றவர்கள் படித்தால் அவர்கள் உடல் விரைவில் குணமடையும். 

நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் உப்பு, மிளகு, வெல்லம் இவற்றை தங்கள் நோய் தீர வேண்டிக்கொண்டு திருக்குளத்தில் இட அவர்கள் நோய் விரைவில்  குணமாகும். மஞ்சள் வேப்பிலை இரண்டையும் அரைத்து உடலில் பூச சரும நோய்கள் குணமாகும். 

சீதளா தேவி உடலையும், மனதையும் குளிர்விப்பவள் மட்டு மல்ல. குளிர்ச்சியை விரும்புபவளும் கூட. அதனால் தான் அவளுக்கு பால்குடம் எடுத்து அபி‌ேஶகம் செய்கின்றனர். மஞ்சள் நீரை  அபி‌ேஶகம் செய்து குளிர்விக்கின்றனர். இளநீரும், பானகமும் நிவேதனம் செய்கின்றனர். அவள் ஆலய கர்பகிருஹத்தில் நீரை நிரப் பினால், நம் உடல் குளிர்ச்சியடைவது மட்டுமல்லாமல், உலகம் குளிர மாரியாக பொழிவாள் அவள். 

நிம்ப சொருபீ, நிஜபோத ரூபி, கும்ப சொரூபி, குண ஞானரூபி, குருமணி ஞான மகமாயீ தேவி என்று அவளை த்யானிப்பவர்களைத் தாயாகக் காப்பாற்றுவாள் என்கிறார் ஸ்ரீ துர்கை சித்தர். சீதளா தேவி நல்லவர்களுக்கு அருள்வாள். கயவர்களுக்கோ அவள் கானல் நீராகத் தெரிவாள். 

உலகில் அதர்மங்கள் தலை தூக்கும்போதெல்லாம் இறைவன் அவதரித்து அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டுகிறான்.  

திருமால் தசாவதாரங்கள் எடுத்து பக்தர்களைக் காத்ததை விஶ்ணு புராணத்தில் காணலாம். பரமசிவன் பல அரக்கர்களை அழித்ததையும், முப்புரங்களை எரித்து தேவர்களைக் காத்ததையும் சிவபுராணத்தில் காணலாம். மஹிஶாசுரனையும், சண்ட முண்டர்களையும், சும்ப நிசும்பர்களையும், வதைத்ததை தேவி மகாத்மியம் பெருமையுடன் பேசும். 

அவ்வாறு ஒரு முறை பூவுலகில் அதர்மம் தலைதூக்கியது. அரக்கர்கள், தங்களின் குலகுருவான சுக்ராச்சாரியாரின் உதவியுடன் அபிசார பிரயோகம் செய்தனர். தீய சக்திகளான ஏவல்களினால் கடுமையான வெப்பம் தேவர்களைத் தாக்கியது. இதனால் கடுமையான ஜுரத்துடனும், வைசூரி கொப்புளங்களுடனும் தேவர்கள் மிகுந்த துன்பப்பட்டனர். தங்கள் துன்பத்தைத் துடைக்க ஸர்வேஸ்வரனான பரமசிவனின் திருப்பாதங்களைச் சரணடைந்தனர். 

தேவர்களைக் காக்கத் திருவுளம் கொண்ட பரமசிவன் தன் யோகத்தில் மூழ்க அவருடைய திருச்சடையிலிருக்கும், சந்திரனிடமிருந்தும், கங்கையிடமிருந்தும் பேரொளி ஒன்று தோன்றியது. குளிர்ச்சியிலிருந்து தோன்றிய அந்தப் பேரொளியே சீதளாம்பிகைீ என்ற திருநாமத்துடன் தேவர்களைக் காப்பதற்காக அவதரித்தாள். அரக்கர்களின் அபிசார பிரயோகத்தை தடுத்து நிறுத்தினாள். தேவர்கள் மகிழ்ந்தனர். அன்னையைப் பலவாறு துதித்தனர். 

நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் வாழ்வில் எல்லா வளங்களும் நல்கும் இந்த அம்பிகை தமிழகத்திலும் பல இடங்களில் குடி கொண்டுள்ளாள். 

சென்னையை அடுத்த மடிப்பாக்கத்தில் அமைந்துள்ள குபேர நகர் விஸ்தரிப்பில் அன்னை ஸ்ரீ சீதளா தேவியின் ஆலயம் அமைந்துள்ளது. ஸ்ரீ ராகவன் குருஜியின் கனவில் தோன்றி தனக்கொரு கோயில் கட்ட ஆசீர்வதித்த தேவிக்கு இங்கு அழகாக ஆலயம் அமைத்துள்ளார் அவர். இங்கு குடிகொண்டுள்ள தேவியின் அழகைக் காண கண் கோடி வேண்டும். 

இங்கு எல்லா நாளும் விசேஶம்தான். ஆடி, தை வெள்ளிக் கிழமைகளிலும், நவராத்திரியிலும், பௌர்ணமி தினங்களிலும் அன்னைக்கு விசேஶ அபி‌ேஶக ஆராதனைகள் சிறப்பான அலங் காரங்களும் நடைபெறுகின்றன. தன் பக்தர்களின் துயர் களைவதில் அவளுக்கு நிகர் அவள்தான். வைத்தியரிடம் செல்லுமுன் ஒரு முறை அன்னையை தரிசித்து சென்றால் உடல் குறை நீங்கி ஆனந்த வாழ்வும், வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று சுகமாக பல்லாண்டு வாழலாம். அன்னையின் பாதம் பணிந்து அவள் அருள் பெறுவோம். 




இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 


ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...



கருத்துகள் இல்லை